தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

Submitted by shahrukh on Thu, 02/05/2024 - 13:14
தமிழ்நாடு CM
Scheme Open
Highlights
  • மூலதன மானியம் அல்லது திட்டச் செலவில் 25% அல்லது அதிகபட்சம் ரூ. 2,50,000/- தொழில்முனைவோருக்கு வழங்கப்படும்.
  • மீதமுள்ள திட்டச் செலவில் வங்கிக் கடன் வழங்கப்படும்.
  • இணை பாதுகாப்பு தேவையில்லை.
  • கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 5 வருடம் ஆகும்.
  • ஒரு தொழில்முனைவோருக்கு அதிகபட்ச திட்டச் செலவு :-
    • ரூ. 15,00,000/- உற்பத்திக்காக.
    • ரூ. 5,00,000/- வணிகம்/ வர்த்தகம்.
    • ரூ. 5,00,000/-  சேவை.
திட்டம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.
பயன்கள் தொழில்முனைவோரின் திட்டங்களுக்கு மூலதன மானியம்.
பயனாளிகள் தமிழக தொழில் முனைவோர்.
குறைத் தீர்க்கும் பிரிவு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, தமிழ்நாடு அரசு.
சந்தா தமிழகத்தின் இத்திட்டம் தொடர்பான உடனடி தகவலுக்கு எங்களுடன் இங்கே இணைந்திருங்கள்.
விண்ணப்பிக்கும் முறை வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் மூலம்.

திட்ட அறிமுகம்

  • பல இளைஞர்கள் தொழில்முனைவோராக மாறி தொழிலைத் தொடங்க விரும்புகிறார்கள்.
  • ஆனால் நிதி நெருக்கடி மற்றும் திட்டங்களின் அதிக செலவு காரணமாக அவர்களில் சிலர் தங்கள் தொழிலைத் தொடங்கும் எண்ணத்தை கைவிடுகிறார்கள்.
  • எனவே, சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவ தமிழக அரசு இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
  • வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் இத்திட்டம் தமிழக அரசின் முக்கிய சமூக நலத் திட்டமாக இருக்கும்.
  • இந்தத் திட்டத்தைத கொண்டு வர  உள்ள முக்கிய நோக்கம், தமிழக இளைஞர்களுக்கு நிதியுதவி அளித்து, அவர்கள் சொந்தமாக வேலை வாய்ப்பு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட உதவுவதாகும்.
  • இத்திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.
  • வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், புதிய தொழில் முனைவோர் தங்கள் சொந்த வருமானம் ஈட்டும் வகையில்  தமிழக அரசு மூலதன மானியம் வழங்கும்.
  • மூலதன மானியம் அல்லது மொத்த திட்டச் செலவில் 25% அல்லது அதிகபட்சம் ரூ. 2,50,000/- வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.
  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச திட்டச் செலவில் மூலதன மானியம் வழங்கப்படும் :-
    தொழில் வகைகள் திட்ட செலவு
    உற்பத்தி செய்தல் ரூ. 15,00,000/-
    வணிகம்/ வர்த்தகம் ரூ. 5,00,000/-
    சேவை ரூ. 5,00,000/-
  • பயனாளி திட்டச் செலவில் பின்வரும் சதவீதத்தை பங்களிக்க வேண்டும் :-
    • பொதுப் பிரிவு பயனாளிகளுக்கு: திட்டச் செலவில் 10%.
    • சிறப்பு வகைப் பயனாளிகளுக்கு: திட்டச் செலவில் 5%.
  • திட்டச் செலவின் மீதமுள்ள தொகை விண்ணப்பதாரருக்கு வங்கிக் கடனாக வழங்கப்படும்.
  • வங்கிக் கடனுக்கு இணை பாதுகாப்பு தேவையில்லை.
  • வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ. 5,00,000/- க்கு குறைவாக உள்ள பயனாளிகள் மட்டுமே மூலதன மானியத்திற்கு தகுதியுடையவர்கள்.
  • தமிழ்நாடு வேலையில்லா இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தகுதியான நபர் தமிழ்நாட்டின் தொழில்முனைவோர் மூலதன மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

திட்டத்தின் பயன்கள்

  • தமிழ்நாடு அரசின் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், தொழில்முனைவோர்/ விண்ணப்பதாரர்களுக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படும் :-
    • மூலதன மானியம் அல்லது திட்டச் செலவில் 25% அல்லது அதிகபட்சம் ரூ. 2,50,000/- தொழில்முனைவோருக்கு வழங்கப்படும்.
    • மீதமுள்ள திட்டச் செலவில் வங்கிக் கடன் வழங்கப்படும்.
    • இணை பாதுகாப்பு தேவையில்லை.
    • கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 5 வருடம் ஆகும்.
    • ஒரு தொழில்முனைவோருக்கு அதிகபட்ச திட்டச் செலவு :-
      • ரூ. 15,00,000/- உற்பத்திக்காக.
      • ரூ. 5,00,000/- வணிகம்/ வர்த்தகம்.
      • ரூ. 5,00,000/-  சேவை.

பயனாளி தகுதி நெறி முறைகள்

  • விண்ணப்பதாரர் தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5,00,000/-.க்கு குறைவாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயது  கீழே குறிப்பிட்ட வயது  இருக்க வேண்டும் :-
    • பொது விண்ணப்பதாரருக்கு 18 வயது முதல் 35 வயது வரை.
    • கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு வகை விண்ணப்பதாரருக்கு 18 வயது முதல் 45 வயது வரை :-
      • பெண்கள்.
      • சிறுபான்மையினர்.
      • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
      • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
      • பட்டியில் வகுப்பினர்.
      • பழங்குடி வகுப்பினர்.
      • முன்னாள் ராணுவத்தினர்.
      • திருநங்கைகள்.
      • மாற்றுத்திறனாளி.
  • விண்ணப்பதாரரின் திட்ட செலவு பங்களிப்பு இருக்க வேண்டும் :-
    • பொது விண்ணப்பதாரருக்கான மொத்த திட்டச் செலவில் 10%.
    • சிறப்பு வகை விண்ணப்பதாரருக்கான மொத்த திட்டச் செலவில் 5%.

தேவையான ஆவணங்கள்

  • தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தில்  பயன் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் தேவை :-
    • தமிழ்நாட்டின் இருப்பிடச் சான்று.
    • குடும்ப அட்டை.
    • 8ஆம் வகுப்பு கல்வி தொடர்பான ஆவணங்கள்.
    • நேட்டிவிட்டி சான்றிதழ். (குடும்ப அட்டை இல்லை என்றால்).
    • ஆதார் அட்டை.
    • வாக்காளர் அடையாள அட்டை.
    • புகைப்படம்.
    • திட்ட அறிக்கை மற்றும் மேற்கோள்.
    • சாதிச் சான்றிதழ். (பொருந்தினால்)
    • முன்னாள் படைவீரர் அட்டை. (பொருந்தினால்)
    • ஊனமுற்றோர் சான்றிதழ். (பொருந்தினால்)
    • வாக்குமூலம்.

விண்ணப்பிக்கும் முறை

  • தகுதியான தொழில்முனைவோர், தமிழ்நாடு வேலையில்லா இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து மூலதன மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் இணையத்தளத்தில் கிடைக்கும்.
  • விண்ணப்பதாரர் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டை, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல் போன்ற அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து முதலில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
  • பதிவுசெய்த பிறகு, மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடவுச்சொல் மூலம் உள்நுழையவும்.
  • வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை படிபடியாக நிரப்பவும் :-
    • சொந்த விவரங்கள்.
    • தொடர்பு விபரங்கள்.
    • கல்வி தொடர்பான விவரங்கள்.
    • திட்ட விவரங்கள்.
  • வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள் மாவட்ட தொழில் மையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்.
  • நேர்காணலுக்குப் பிறகு, மூலதன மானியத்திற்கான விண்ணப்பங்கள் கடனுக்காக வங்கிக்கு அனுப்பப்படும்.
  • பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டப் பயிற்சி நடத்தப்படும்.
  • தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் பயிற்சியில் கலந்துகொள்வது கட்டாயமாகும்.
  • விண்ணப்பதாரர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சிச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்தவுடன் மட்டுமே வங்கியால் கடன் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களின் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் பர்ர்க்கலாம்.

திட்டத்தின் விண்ணப்ப ஓட்டம்

Application Flow of Unemployed Youth Employment Generation Programme

முக்கியமான இணையதள இணைப்புகள்

தொடர்பு விபரங்கள்

Matching schemes for sector: Fund Support

Sno CM Scheme Govt
1 Pradhan Mantri Awas Yojana(PMAY) – Housing for All CENTRAL GOVT

Matching schemes for sector: Business

Sno CM Scheme Govt
1 Credit Guarantee Scheme for Startups CENTRAL GOVT
2 Prime Minister's Employment Generation Programme CENTRAL GOVT

Comments

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

Rich Format