ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்

Submitted by Megha on Thu, 16/05/2024 - 12:36
தமிழ்நாடு CM
Scheme Open
E.V.R Maniammaiyar Ninaivu Marriage Assistance Scheme For Daughters Of Poor Widows Logo
Highlights
பயனாளி பயன்கள்
பட்டதாரி அல்லாதவர்களுக்கு
  • நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
    • ரூ. 15,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
    • ரூ. 10,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
  • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடையவர்கள்
  • நிதி உதவித்தொகை ரூ. 50,000/- :-
    • ரூ. 30,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
    • ரூ. 20,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
  • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
Customer Care
  • தமிழ்நாடு சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை உதவி எண் :- 044-24351891.
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்.
பயன்கள்
  • நிதி உதவி ரூ. 25,000/- மற்றும் ரூ. 50,000/-.
  • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
பயனாளி ஏழை விதவைகளின் மகள்கள்.
குறைத் தீர்க்கும் பிரிவு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

திட்ட அறிமுகம்

  • தமிழகத்தில் பெண்கள் நலனுக்காக தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
  • இந்தத் திட்டங்களில் ஒன்றுதான் 'ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்'.
  • தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையாள் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தைத் தொடங்குவதன் முக்கிய நோக்கமானது, ஏழை விதவைகள் தங்கள் மகள்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்க்காக நிதி உதவி வழங்கப்படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் விதவை தாய்மார்களுக்கு அவர்களின் மகளின் திருமணத்திற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பின்வரும் இரண்டு வகைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன :-
    • பட்டதாரிகள் அல்லாதவர்கள்.
    • பட்டதாரி அல்லது பட்டயப்படிப்பு உடைய விண்ணப்பதாரர்.
  • இத்திட்டத்தின் கீழ், பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ. 25,000/- உதவித்தொகை வழங்கப்படும்.
  • பட்டதாரிகளுக்கு ரூ. 50,000/- நிதி உதவி வழங்கப்படும்.
  • மேலும் பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாத இருவருக்கும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.
  • ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் பலங்களை பெற, பொது சேவை மையம் (CSC)மூலம் பயனாளிகள் விண்ணப்பிக்களாம்.

திட்டத்தின் பயன்கள்

  • ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு பின்வரும் பயன்கள் கிடைக்கப்படும் :-
    பயனாளி பயன்கள்
    பட்டதாரி அல்லாதவர்களுக்கு
    • நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
      • ரூ. 15,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
      • ரூ. 10,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
    • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
    பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடையவர்கள்
    • நிதி உதவித்தொகை ரூ. 50,000/- :-
      • ரூ. 30,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
      • ரூ. 20,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
    • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.

தகுதி நெறி முறைகள்

  • கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தியடைபவர்கள், ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் :-
    • தமிழ்நாட்டின் குடியிருப்பாளாக இருக்க வேண்டும்.
    • ஆண்டு வருமானம் ரூ. 72,000/-.
    • குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை.
    • மணமகளின் வயது குறைந்தது 18.
    • மணமகனின் வயது 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  • ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பொழுது தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு :-
    • மணமகன் மற்றும் மணமகளின் வயதுச் சான்று.
    • விதவை சான்றிதழ்.
    • ஆதார் அட்டை.
    • சாதிச் சான்றிதழ்.
    • திருமண அழைப்பிதழ்.
    • குடும்ப அட்டை.
    • வருமானச் சான்றிதழ்.
    • கணவரின் இறப்புச் சான்றிதழ்.
    • மணமகள் கல்விச் சான்றிதழ்.
    • தமிழ்நாட்டின் இருப்பிடச் சான்று.

விண்ணப்பிக்கும் முறை

  • பயனாளிகள் அருகிலுள்ள பொது சேவை மையத்தின் மூலம், ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்கலாம்.
  • பயனாளியின் சார்பாக அங்குள்ள முகவர் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணத்தை பதிவேற்றம் செய்வார்.
  • அதன் பிறகு பயனாளியின் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள் மாவட்ட சமூக நல அலுவலரால் ஆய்வு செய்யப்படும்.
  • ஏற்க்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை அதற்க்குறிய பயனாளிக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, நிதி உதவித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

திட்டத்தின் அம்சங்கள்

  • பயனாளர்கள், ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டத்தின் பயன்களை பெற, திருமண தேதிக்கு 40 நாட்களுக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
  • மணமகள் மற்றும் மணமகனின் வயது குறைந்தது 18 மற்றும் 21 ஆக இருக்க வேண்டும்.
  • இந்த திட்டத்தின் கீழ், விதவை தாய்மார்கள் இரண்டு வகைப்படுவர் :-
    • பட்டதாரி அல்லாத மணப்பெண், உதவித்தொகை ரூ. 25,000/- பெற தகுதியுடையவர்.
    • பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடைய மணப்பெண், உதவித்தொகை ரூ. 50,000/- பெற தகுதியுடையவர்.
  • நிதியுதவியானது நேரடியாக விதவை தாய்மார்க்கு வழங்கப்படும்.
  • தாய்க்கு மரணம் ஏற்பட்டால், நிதியுதவியானது மணமகளுக்கு சேரும்.
  • விதவை தாய்மார்க்கு இரண்டு மகள்கள் இருந்தால், ஒரே ஒரு மகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்.

முக்கியமான இணைப்புகள்

தொடர்பு விபரங்கள்

  • தமிழ்நாடு சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை உதவி எண் :- 044-24351891.
  • சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு,
    எண். 1 பனகல் மாளிகை கட்டிடம், 2வது தளம்,
    (கலைஞர் ஆர்ச் அருகில்), ஜீனிஸ் சாலை,
    சைதாப்பேட்டை, சென்னை - 600015.

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

Rich Format