அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்

Submitted by Megha on Mon, 13/05/2024 - 17:40
தமிழ்நாடு CM
Scheme Open
Annai Therasa Ninaivu Marriage Assistance Scheme for Orphan Girls Logo
Highlights
  • பட்டதாரி அல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி ரூ. 25,000/-.
  • பட்டதாரி ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி ரூ. 50,000/-.
  • திருமாங்கல்யத்திற்கு இரு பிரிவினருக்கும் 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
Customer Care
  • தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்.
பயன்கள்
  • நிதி உதவி ரூ. 25,000/- மற்றும் ரூ. 50,000/-.
  • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
பயனாளி ஆதரவற்ற பெண் பிள்ளைகள்.
வயது வரம்பு
  • மணமகனுக்கான வயது குறைந்தது 21, மற்றும்.
  • மணமகளுக்கான வயது குறைந்தது 18 ஆக இருக்க வேண்டும்.
குறைத் தீர்க்கும் பிரிவு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பொது சேவை மையத்தில்
விண்ணப்பிக்கலாம்.

திட்ட அறிமுகம்

  • ஆதரவற்ற பிள்ளைகள் தமிழக அரசு "அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் ஆதரவற்ற பென் பிள்ளைகள் அவர்களின் திருமண நேரதில் நிதி உதவி பெருவார்கள்.
  • இது தமிழ்நாடு திருமண உதவித் திட்டத்தின் துணைப் பகுதியாகும்.
  • இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்ற பிள்ளைகள் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் குறைத் தீர்க்கும் பிரிவு, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
  • இத்திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு நிதி உதவி ரூ. 25,000/- மற்றும் ரூ. 50,000/- வழங்கப்படும்.
  • இந்த திட்டம் பின்வரும் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது :-
    • பட்டதாரிகள்.
    • பட்டதாரிகள் அல்லாதவர்கள்.
  • பட்டதாரிகள் ரூ. 25,000/- உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • பட்டதாரி அல்லாதவர்கள் ரூ. 50,000/- உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • இது தவிர பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாத இருவருக்கும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC)சென்று அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டத்திற்க்காக விண்ணப்பிக்களாம்.

திட்டத்தின் பயன்கள்

  • அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு பின்வரும் பயன்கள் கிடைக்கப்படும்:
    பயனாளி பயன்கள்
    பட்டதாரி அல்லாதவர்களுக்கு
    • நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
      • ரூ. 15,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
      • ரூ. 10,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
    • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
    பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடையவர்கள்
    • நிதி உதவித்தொகை ரூ. 50,000/- :-
      • ரூ. 30,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
      • ரூ. 20,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
    • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.

தகுதி நெறி முறைகள்

  • கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தியடைபவர்கள் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் :-
    • தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
    • மணமகளின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
    • மணமகனின் வயது 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
    • வருமான வரம்பு இல்லை.
    • குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை.

தேவையான ஆவணங்கள்

  • ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டத்தை விண்ணப்பிக்கும் பொழுது தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு :-
    • மணமகள் மற்றும் மணமகனின் வயதுச் சான்று.
    • சாதிச் சான்றிதழ்.
    • ஆதரவற்ற சிறுமியர் சான்றிதழ்.
    • திருமண அழைப்பிதழ்.
    • மணமகள் கல்விச் சான்றிதழ்.
    • குடியிருப்பு சான்று.
    • திருமண புகைப்படம்.
    • குடும்ப அட்டை.
    • ஆதார் அட்டை.

விண்ணப்பிக்கும் முறை

  • பயனாளிகள் அருகிலுள்ள பொது சேவை மையத்தின் மூலம், தமிழ்நாடு அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்கலாம்.
  • பயனாளியின் சார்பாக அங்குள்ள முகவர் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணத்தை பதிவேற்றம் செய்வார்.
  • அதன் பிறகு பயனாளியின் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள் மாவட்ட சமூக நல அலுவலரால் ஆய்வு செய்யப்படும்.
  • ஏற்க்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை அதற்க்குறிய பயனாளிக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, நிதி உதவித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

திட்டத்தின் அம்சங்கள்

  • அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற, திருமண தேதிக்கு 40 நாட்களுக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், திருமண தேதிக்கு ஒரு நாள் முன்னதாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
  • மணமகள் மற்றும் மணமகனின் வயது 18 மற்றும் 20 வயதாக இருக்க வேண்டும்.
  • இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயன்பெற இரண்டு வகைகள் உள்ளன :-
    • பட்டதாரி அல்லாத ஆதரவற்றவர்கள் ரூ. 25,000/- உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள்.
    • பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு பெற்ற ஆதரவற்றவர்கள் ரூ. 50,000/- உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள்.
  • கல்வித் தகுதியில் பின்வரும் வகைகள் உள்ளன :-
    • உதவித்தொகை ரூ. 25,000/- பெற, கல்வித் தகுதி தேவையில்லை.
    • உதவித்தொகை ரூ. 50,000/- பெற, விண்ணப்பதாரர் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு பெற்றவராக இருக்க வேண்டும்.

முக்கியமான இணைப்புகள்

தொடர்பு விபரங்கள்

  • தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.
  • சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு,
    எண். 1 பனகல் மாளிகை கட்டிடம், 2வது தளம்,
    (கலைஞர் ஆர்ச் அருகில்), ஜீனிஸ் சாலை,
    சைதாப்பேட்டை, சென்னை - 600015.

Comments

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

Rich Format